முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன(காணொளி)

334 0

வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தலைமையில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

இறுதி யுத்தம் நடைபெற்ற இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் அவ்விடத்திற்குச் சென்று அப்பகுதி மக்களுடன் இணைந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மற்றும் சிரமதானப் பணிகளை முன்னெடுத்துள்ளார்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள மக்களை அங்கு அழைத்து செல்வதற்கான இலவச போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.