மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இவ் வருடத்திற்கான ஊடக மகாநாடு (காணொளி)

358 0

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில், மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இவ் வருடத்திற்கான ஊடக மகாநாடு நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராஜா தலைமையில் நடைபெற்ற குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் விருந்தினராக தேசிய ,ளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் கலந்து கொண்டார்.

இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மான்றத்தின் பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள், நிஸ்கோ முகாமையாளர் சைமன் சில்வா, கணக்காளர் ஜோன் பொஸ்கோ உற்பட மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள, பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகளுடாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக வேலைத்திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு உரிய நேரத்தில் தெரியப்படுத்துவதில்லை எனவும், எல்லா நிகழ்வகளையும் தொகுத்து அறிக்கையாக ஊடகவியலாளர்களுக்கு சமாப்பிக்கப்படுகின்ற போது முழுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கலந்து கொண்ட மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளரின் கருத்த ஏற்றுக்கொண்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது எனவும், மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து வேளைத்திட்டங்கள் குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் இளைஞர் சேவைகள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.