நெதர்லாந்து இலங்கையிடம் கோரிக்கை

241 0

தமது வர்த்தக கப்பல்களுக்கு இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பை வழங்குமாறு நெதர்லாந்து அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் கடற்படை மூலம் இந்த பாதுகாப்பை உறுதி செய்து தரும்படிம்; கோரப்பட்டுள்ளது.

நெதர்லாந்துக்கு சொந்தமான கப்பல்களுக்கான பாதுகாப்பை அந்த நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ள போதும் சோமாலிய கடற் கொள்ளையர்களிடம் இருந்து தமது கப்பல்களை பாதுகாக்கும் நோக்கில் இலங்கையிடம் இருந்து மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை கடற்படையினை கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.