எங்கள் உயிர்களை மாய்த்தேனும் போராட தயார்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் (காணொளி)

365 0

 

கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில், காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு கோரி அவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 82ஆவது நாளாக தொடர்கிறது.

இந்நிலையில் இன்றைய தினம் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் நல்லாட்சி அரசு இதற்கான பதிலை வழங்காது போராட்டத்தை நீள விடுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் தங்கள் உறவுகள் தொடர்பான உரிய பதிலை அரசு வழங்கும் வரை, தங்களது உயிரை மாய்த்தேனும் போராட தயாராக இருப்பதாகவும்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு கோரி கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.