மாற்றுக் காணிகளில் சென்று வாழக்கூடிய நிலையில் தாங்கள் தற்போது இல்லை – பன்னங்கண்டி மக்கள் (காணொளி)

470 0

கிளிநொச்சியில் பன்னங்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக்குடியிருப்புப் பகுதி மக்களின் கவனயீர்ப்புப்போராட்டம் இன்று 53வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக்குடியிருப்பு பகுதிகளில், 1990ஆம் ஆண்டு முதல் தனியாருக்கு சொந்தமான காணிகளில் குடியிருந்து வரும் குடும்பங்கள், மாற்றுக் காணிகளில் சென்று வாழக்கூடிய நிலையில் தாங்கள் தற்போது இல்லை எனவும், தாங்கள் குடியிருக்கின்ற காணியை தங்களுக்குப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்தவாரம் வடக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட உயரதிகாரிகளை சந்தித்துக்;; கலந்;துரையாடியபோது, குறித்த காணியானது தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியாகக் காணப்படுவதால் இதில் அதன் உரிமையாளருடன் பேசி ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையில் காணியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இல்லாவிடின் மாற்றுக்காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு மாற்றுக்காணிகளை பெற விரும்பினால் அருகில் உள்ள கண்டாவளைப் பிரதேசத்தில் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அதிகாரிகள் கூறப்பட்டநிலையில் மாற்றுக் காணிகளில் சென்று வாழக்கூடிய நிலையில் தாங்கள் தற்போது இல்லை என தெரிவித்துள்ள மக்கள், தொடர்ந்தும் போரட்டத்தை முன்னெடுத்துள்ளனர்