தொழில் உரிமைக்காக போராடிவரும் பட்டதாரிகளுக்கு சமூக சிவில் அமைப்புகள் தமது ஆதரவினை வழங்க வேண்டும் -வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்(காணொளி)

303 0

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமைக்கான போராட்டம் 81 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

தமது போராட்டம் தொடர்பில் அரசாங்கம் சாதகமான நடவடிக்கையினை எடுத்தாலும் அது தொடர்பில் உறுதியான பதில்கள் எதுவும் இதுவரையில் வழங்கப்படவில்லை எனவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ச்சியான போராட்டத்தினை மேற்கொண்டுவரும் நிலையில் சமூத்தின் பல்வேறு தரப்பினராலும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டதாகவும், ஆனால் தமது போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் கவலை வெளியிட்டனர்.

எனவே நியாயமான போராட்டம் வெற்றிபெற வேண்டுமானால் சிவில் சமூக அமைப்புகளும் போராட்டத்திற்கு ஆதரவான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.