முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று செம்மணியில்….(காணொளி)

279 0

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று தொடக்கம் எதிர்வரும் 18ம் திகதி வரை அனுஸ்டிக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் செம்மணியில் நினவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது.

1996ம் ஆண்டு கிருசாந்தி குமாரசாமி உட்பட 600 தமிழ் மக்கள் கொன்று புதைக்கப்பட்ட செம்மணியில், இன்றைய தினம் கொல்லப்பட்டவருக்கான நினைவேந்தல் தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாளைய தினம் வடமராட்சி வல்வெட்டித்துறை செம்மீன் படிப்பகத்தில் இடம்பெறவுள்ளது. நன்பகல் 12மணியளவில் தென்மராட்சி மிருசுவிலில் சுடரேற்றவுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாளை மறு தினம் வட்டுக் கோட்டை சுழிபுரம் வழக்கம்பரை அம்மன் ஆலயத்திலும் நண்பகல் 12-00 மணியளவில் நவாலி விமான குண்டு வீச்சுத் தாக்குதலில் 150பேர் கொல்லப்பட்ட நவாலி சென்.பீற்றர் தேவாலயத்திலும் இடம் பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்