வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சிவசக்தி ஆனந்தன் இன்று சந்தித்தார்……….(காணொளி)

467 0

வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி இன்று 9ஆவது நாளாக சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சுகாதார தொண்டர்களின் சேவைக்காலம் மற்றும் நியமனம் வழங்குவதில் சுகாதார அமைச்சு கொண்டுள்ள நிலைப்பாடுகள் தொடர்பில் அவர் கேட்டறிந்தார்.

இந்த சந்திப்பின்போது, வடக்கில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தாம் பணியாற்றிவருவதாகவும் தமக்கு சேவைக்காலத்தின் அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் சுகாதார தொண்டர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்