முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியில் ஆபத்தான நிலையில்……..(காணொளி)

307 0

முல்லைத்தீவு பரந்தன் ஏ-35வீதி காபெற் வீதியாகப் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் இதிலுள்ள பாலங்களும் புனரமைக்கப்பட்டுள்ளன.

இருந்தபோதும் மிக நீளமான பாலமாகக் காணப்படுகின்ற வட்டுவாகல் பாலமானது பனரமைக்கப்படாது மிக ஆபத்தான முறையில் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாலத்தின் பாதுகாப்புத் தூண்கள் அற்றநிலையில் காணப்படுவதுடன் பாலமும் அங்காங்கே சேதமடைந்து காணப்படுகின்றது.

இதனால் இதனுடாகப் பயணிக்கும் மக்கள், வாகனங்கள் பெரும் ஆபத்துக்களை எதிரத்கொள்ளும் நிலை காணப்படுவதாக  பயணிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் பல உயிரிழப்புக்களும் நிகழ்ந்திருப்பதாகவும்  குறித்த பாலத்;தினை புனரமைத்துத்தருமாறு பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் கருத்துத்தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், குறித்த பாலத்தை புனரமைப்பதற்கான கோரிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு பெரும் தொகையான நிதி தேவைப்படுவதாகவும் கூறினார்.

உரிய நிதி கிடைக்கின்ற பட்சத்தில் வட்டுவாகல் பாலம் புனரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.