மோடியின் திறப்புவிழாவில் தமிழுக்கு ஏற்பட்ட அவலம்

272 0

மலையகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாய் இந்திய அரசின் நிதியுதவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை பெரும் ஆரவாரத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்புடன் திறந்து வைக்கப்பட்டுள்ள குறித்த வைத்தியசாலையின் பிரதான பெயர்ப் பலகையில் தமிழ் கொலை இடம்பெற்றுள்ளது எமது தமிழ் அமைச்சர்களின் பார்வையில் படாமல் போய்விட்டது.
இன்றை தினம் அங்கு உரையாற்றிய பாரதப் பிரதமர் உலகிலேயே பழமையான மொழியைப் பேசுபவர்கள் மலையக மக்கள் என பெருமிதம் பட்டுள்ள நிலையில், இந்தத் தமிழ்கொலை இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.