மோடிக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் கைது

296 0

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் நேற்றிரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு நகரிற்குள் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததுடன், பொரலை காவல்துறையினர் இவர்கனை கைது செய்துள்ளனர்.
தொழிற்சங்க தேசிய முன்னணியினாலேயே குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக பொரலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.