காந்தி குடும்பத்தாரின் சொத்துக்களை ஆராய நீதிமன்றம் உத்தரவு

231 0

காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி மற்றும் அவரின் மகன் ராகுல் காந்தி உள்ளிட்ட காந்தி குடும்பத்தவர்களின் சொத்துக்கள் தொடர்பில் ஆராய இந்திய உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நெசனல் ஹெரல்ட் என்ற இந்தியப் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றை மையப்படுத்தியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேருவினால் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பத்திரிகையானது காங்கிரஸ் கட்சியின் தேசிய பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 2008ஆம் ஆண்டு 15 மில்லியன் நட்டம் ஏற்பட்டதையடுத்து குறித்த நிறுவனம் மூடப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.