ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை அந்தஸ்த்தை வழங்குவதற்கான இறுதிகட்ட பணிகள் அடுத்தவாரம்

218 0
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை அந்தஸ்த்தை வழங்குவதற்கான இறுதிகட்ட பணிகள் அடுத்தவாரம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சர்களின் சபை, நேற்றையதினம் அங்கீகாரம் வழங்கியது.
சர்வதேச மனித உரிமைகள் சார்ந்த சட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களை இலங்கை அரசாங்கம் அமுலாக்கி இருப்பதாகவும், அதனால் இந்த வரிச்சலுகையைப் பெற இலங்கைக்கு தகுதி இருக்கிறது என்பதால், இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும், ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் குழு தமது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
இதன்படி குறித்த வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கான மூன்று நடைமுறை செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.