முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதை எதிர்க்கும் அரசியல்வாதிகள் இருப்பார்களேயானால், அவர்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு வழி விடவேண்டும்- றிசாட்(காணொளி)

337 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதை எதிர்க்கும் அரசியல்வாதிகள் இருப்பார்களேயானால், அவர்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு வழி விடவேண்டும் என வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்காக வருகைதந்த அரேபிய செல்வந்தர்களை முல்லைத்தீவுக்கு அழைந்துவந்தபோதே இதனைத் தெரிவித்தார்.

அடாத்தாகக் காணிகளைபிடித்து வீடுகள் கட்டுவதற்காக யாரும் வரவில்லை எனவும், வீடுகள் இல்லாத தமிழ், முஸ்லிம், சிங்கள, கத்தோலிக்க மக்களுக்கும் வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கே சில வெளிநாட்டு நலன்விரும்பிகள் நேற்றைய தினம் வருகை தந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.