ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் மேலும் ஆய்வு செய்ய காலம் தேவை – ஜனாதிபதி

239 0
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் மேலும் ஆய்வு செய்ய காலம் தேவை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அபிவிருத்தி  தொடர்பான வழிமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவினால் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய சிறிது காலம் அவசியம் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார் என இணை அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக்க எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.