திருமண மண்டப மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 26 பேர் பலி

271 0

இந்தியாவின் ராஜஸ்தானில் திருமண மண்டப மதில் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 26 பேர் பலியாகினர்.

ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் ஏற்பட்ட திடீர் சூறாவளியின் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய மேலும் 15 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளாhக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை ராஜஸ்தான் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்