இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் பின்னர் பல நன்மைகள் கிடைக்கலாம் -சீ.யோகேஸ்வரன் (காணொளி)

257 0

அரசாங்கத்திற்கு பலம் ஏற்பட்டு விடும் என்பதற்காகவே ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இந்திய பிரதமர் நரேந்திர மாடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திபில் இக்கருத்தை வெளியிட்டார்.

இந்திய பிரதமரின் வருகையின் பின்னர் பல நன்மைகள் கிடைக்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது.

அதேபோன்று மலையக அரசியல் தலைமைகளும் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு பிரதமரின் கோரிக்கைக்கு அமைய ஏதாவது இந்த அரசாங்கம் செய்துவிடும்,

சர்வதேச ரீதியில் அரசாங்கம் பலம்பெற்றுவிடும் என்பதற்காக இந்த எதிர்ப்பினை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் வெளியிட்டு வருகின்றனர்.

என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.