மட்டக்களப்பு பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கபடி போட்டி (காணொளி)

316 0

கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கபடி போட்டி நேற்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக கபடி ஆண் மற்றும் பெண் அணிகளுக்கு இடையில்  போட்டிகள் நடைபெற்றன.

நடைபெற்ற போட்டியில் இறுதி போட்டிக்கு தெரிவான வவுணதீவு மற்றும் கிரான் பிரதேச செயலக பெண்கள் கபடி அணிகளும், மண்முனை வடக்கு மற்றும் செங்கலடி பிரதேச செயலக ஆண்கள் கபடி அணிகளுக்குமான இறுதிப் போட்டி நேற்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கபடி போட்டியில் கிரான் பிரதேச செயலக பெண்கள் அணியும், மண்முனை வடக்கு பிரதேச செயலக ஆண்கள் அணியும் வெற்றிபெற்றுள்ளன.

இந்த இரண்டு அணிகளும் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ளன.