வயோதிபர் உடலமாக மீட்பு

260 0

அதுருகிரிய – ஹோகந்தர – ரத்னாராம பிரதேசத்தின் குடியிருப்பு ஒன்றில் இருந்து இறந்த நிலையில் மனித உடலம் ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

அந்த குடியிருப்பில் இருந்த வயோதிப பெண்ணொருவரும் சிகிச்சைகளின் பொருட்டு நேற்றிரவு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டவர் 68 வயதான ஆண் எனவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் 70 வயதான அவரது மனைவி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மரணமானவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் எனவும் அவர் சில தினங்களாக சுகவீனமுற்றிருந்ததாகவும் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.