கிங் கங்கையில் நீராடச் சென்ற இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

236 0

காலி – கிங் கங்கையில் நீராடச் சென்ற இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சிறுவர்கள் குழு ஒன்று நேற்றையதினம் மாலை சுற்றுலா மேற்கொண்டு, குறித்த கங்கையில் நீராடிய வேளையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இரண்டு பேர் நீரில் மூழ்கிய நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் காலி – பொத்தல – நராவல பகுதியைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுகளை உடைய இரண்டு பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பத்தலகுண்டு பகுதியில் மீன்பிடி படகு ஒன்று மூழ்கியதை அடுத்து காணாமல் போன மீனவர் ஒருவரை தேடும் பணிகள் இன்றும் மேற்கொள்ளப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

இதேவேளை திஸ்ஸமஹாராம – கிரிந்த கடற்பரப்பில் நீராட சென்று காணாமல் போன நபர் இன்னும் மீட்கப்படவில்லை.

இந்த சம்பவமும் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.