இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தாமும் கலந்து கொள்ளவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல – கோனகல்லதெனிய பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை, கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், உரிய வகையில் தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்ப்பதாக மஹிந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை விவகாரத்தால் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் சட்ட ரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மேற்கொள்வார் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.