மோடியின் இலங்கை விஜயத்தின் போது, எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட மாட்டாது – அரசாங்கம்

236 0

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது, எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட மாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

விசாகப்பூரணை தினத்தில் கலந்து கொள்வதற்காகவும், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைப்பதற்காகவுமே அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.

அவர் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் எதனையும் இலங்கையில் முன்னெடுக்க மாட்டார் என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.