மோடியின் விஜயத்தை முன்னிட்டு, கொழும்பில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

236 0

மோடியின் விஜயத்தை முன்னிட்டு, கொழும்பு நகரில் மாலை 6 மணியில் இருந்து நாளை பகல் வரையில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை முன்னிட்டு, கொழும்பு நகரில் மாலை 6 மணியில் இருந்து நாளை பகல் வரையில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

காவற்துறை தலைமையகத்தின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, பேஸ்லைன் வீதி, தாமரைத் தடாகம், பித்தளை சந்தி, கொள்ளுபிட்டி, காலிமுகத்திடல், பௌத்தலோக்க மாவத்தை உள்ளிட்ட பல வீதிகளில், இன்று மாலை 6 மணிக்கு பின்னர் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய பிரதமர் மோடி பயணிக்கின்ற சந்தர்ப்பங்களில் இந்த வீதிகளும்,அதன் உள்வீதிகளும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீதியின் ஒருமருங்கிலேனும் வாகனங்களை செலுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் காவற்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.