நாரேந்திர மோடி இன்று 6 மணிக்கு இலங்கைக்கு

324 0

சர்வதேச வெசக் நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கில் இந்தியப் பிரதமர் நாரேந்திர மோடி இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இன்று மாலை 6 மணியளவில் விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு வெசாக் நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

இதனிடையே, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் ஆகியோருடனும் மோடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

இந்தியப் பிரதமரது விஜயத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த காலப் பகுதியில் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, பேஸ்லைன் வீதி, தாமரைத் தடாகம், பித்தளை சந்தி, கொள்ளுபிட்டி, காலிமுகத்திடல், பௌத்தலோக்க மாவத்தை உள்ளிட்ட பல வீதிகள், இன்று மாலை 6 மணிக்கு பின்னர் மூடப்பட்டிருக்கும்

அத்துடன் இந்திய பிரதமர் மோடி பயணிக்கின்ற சந்தர்ப்பங்களில் இந்த வீதிகளும்,அதன் உள்வீதிகளும் மூடப்பட்டிருக்கும் என்று பொலிஸார் அறிவித்துள்ளார்.