கணவன் கொலை – மனைவி கைது

440 0

crime-murder-720x480அம்பாறை தம்பிலுவில் பிரதேசத்தில் கணவனை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இவர் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தில், கோடாரியால் தாக்கி கணவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருக்கோவில் தம்பிலுவில் 2ஆம் பிரிவு ஆலையடி வீதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கணவன் மனைவிக்கு இடையிலான வாய்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
சம்வம் தொடர்பில் திருக்கோவில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.