காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றும் தொடர்கிறது (காணொளி)

266 0

வவுனியாவில் இன்று 74 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் இப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசியல் கட்சிகள், தங்கள் போராட்டத்தில் அக்கறை செலுத்தவில்லை என தெரிவிக்கும் போராட்டக்காரர்கள் இனியும் அவ்வாறு இல்லாமல் தங்களது பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு முடிவினை விரைவாக பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.