தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேரம் பேசாமையினால் பல நன்மைகளை இழந்துள்ளது-இரா.சங்கையா(காணொளி)

294 0

 

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேரம் பேசாமையினால் பல நன்மைகளை இழந்துள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக செயலாளரும் முன்னாள் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான இரா.சங்கையா தெரிவித்தார்.

இன்று கிளிநொச்சி ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

சரத் பொன்சேகா பேரம் பேசி அமைச்சு பதவியையும், பீல்மாஸ்டர் என்ற உயரிய பதவியையும் பெற்றுக்கொண்டார். அதே போன்று பலர் பேரம் பேசி நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதையும் செய்யவில்லை என இரா.சங்கையா தெரிவித்துள்ளார்.