இலங்கை வரும் இந்திய பிரதமருக்கு பிரதமர் ரணில் தலைமையில் வரவேற்பு

234 0

இலங்கையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் வெசாக் நோன்மதி சர்வதேச வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் வியாழக்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடையவுள்ளார்.

அவரை பூரண அரச மரியாதையோடு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எட்டு நாடுகளின் அமைச்சர்கள் சர்வதேச வெசாக் வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளவுள்ளதோடு நேபாள ஜனாதிபதி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

அவரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பூரண அரச மரியாதையோடு விமான நிலையத்தில் வரவேற்பார் என தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.