கடலில் நீராட சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி பலி

267 0

வென்னப்புவ – கடவத்த பிரதேசத்தில் கடலில் நீராட சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் வென்னப்புவ – தென் உல்ஹிட்டியாவ – கடவத்த பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது.

தனது மனைவி மற்றும் குடும்ப உறவினர்கள் சிலருடன் நேற்று மாலை வென்னப்பு – கடவத்த தேவாலயத்திற்கு அருகில் உள்ள கடலில் நீராடி கொண்டிருந்த போது குறித்த நபர் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு காணமால் போனதாக உறவினர்கள் காவற்துறையிடம் குறிப்பிட்டுள்ளனர்.

காணாமல் போன நபரின் சடலம் இன்று காலை கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறை முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.