குழந்தை கடத்தல் சம்பவம் – கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

205 0

கம்பளை – கங்கவட்ட பார பிரதேசத்தில் இடம்பெற்ற குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் மே மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கம்பளை பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4ஆம் திகதி கம்பளை பிரதேசத்தில் வைத்து 2 அரை வயதுடைய குழந்தை கடத்தப்பட்டது.

இதன்போது குழந்தையுடன் இருந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரும் காணாமல் போனதாக காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கடத்தல்காரர்கள் குழந்தையை விடுவிப்பதற்காக குழந்தையின் பெற்றோரிடம் 30 லட்சம் ரூபா கம்பம் கோரியிருந்தனர்.

இந்தநிலையில், குழைந்தையுடன் காணாமல் போன குறித்த இளைஞர் நேற்று காலை கடத்தல் காரர்களால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பின்னர் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கடத்தப்பட்ட குழந்தை மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் வைத்து மீட்கப்பட்டது.

இந்தநிலையில், குறித்த குழந்தை கடத்தலை திட்டமிட்டவர் குழந்தையுடன் காணாமல் போன இளைஞரே என தெரியவந்தது.

இதற்கமைய அந்த இளைஞர் உட்பட 2 பெண்கள் அடங்களானோர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.