கடவுச்சீட்டு மோசடியில் ஈடுப்பட்டதாக கூறி இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையரிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் போலி கடவுச்சீட்டை பயண்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த 4 இலங்கையர்கள் உட்பட 8 பேர் மும்பை வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், அவர்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலேயே குறித்த இலங்கையர் கடந்த வெள்ளிக்கிழமை பெங்குளுரில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரை முப்பை காவற்துறையினர் கைது செய்திருந்தனர்.
இதனையடுத்து நேற்று அவரை நீதவான் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 9ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.