கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரணைதீவு மக்களை; சி.தவராசா மற்றும் மு.சந்திரகுமார் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்(காணொளி)

346 0

கிளிநொச்சி இரணைமாதாநகர் பகுதியில் தமது பூர்வீக நிலமான இரணைதீவில் மீள்குடியேற்றக்கோரி இன்று 7ஆவது நாளாக இரணைதீவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறித்த மக்களை வடக்கு மாகாண எதிர்க்கட்சித்; தலைவர் சி.தவராசா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர் இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

கிளிநொச்சி இரணைமாதா நகர்ப்பகுதியில் தங்கியுள்ள இரணைதீவு மக்கள் தங்களை தமது சொந்த இடமான இரணைதீவில் மீள்குடியேற்றக்கோரி கடந்த மே 1ம் திகதி கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் வடக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் குறித்த மக்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது தமது பூர்வீக நிலத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு குறித்த மக்கள் வடக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.