நிதி மோசடி விசாரணைப்பிரிவு செயலிழந்துள்ளதாக கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை – காவல்துறை தலைமையகம்

202 0

நிதி மோசடி விசாரணைப்பிரிவு செயலிழந்துள்ளதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இங்கு முன்னெடுக்கப்பட்ட சகல விசாரணை நடவடிக்கைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விசாரணை நடவடிக்கைகளுக்காக காவல்துறை அதிகாரிகள் பலர் காவற்துறை மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் காவற்துறை தலைமையகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.