பசில் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பாணை!

212 0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளபடவுள்ளது.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், முறைப்பாட்டு சாட்சியாளர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திவிநெகும திணைக்களத்தின் நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.