ஹபரண – திருகோணமலை பிரதான வீதியில் திம்பிரிகஸ்வெவ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து மீது நபர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வீதியில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாத்தளை – லக்ஷ்ஹேன -உடஸ்கிரிய பிரதேசத்தினை சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.