மே தின கூட்டத்தில் காணாமல் போனவர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்

266 0
காலி முகத்திடலில் இடம்பெற்ற மகிந்த அணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்று காணாமல் போனவர் அவரது உறவினர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் இடம்பெற்ற மகிந்த அணியின் மே தின கூட்டத்திற்கு சென்ற  அவிசாவளை – சீத்தாகமை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதான 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போனார்.
இது தொடர்பில் உறவினர்களால் அவிசாவளை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனை தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இந்நிலையில் காணாமல் போன நபர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் 79 வது இலக்க சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தி பிரிவுக்கு அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டி காவற்துறை அதிகாரிகள் குறித்த நபரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதித்ததாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் வழங்கியதாக குறித்த நபரின் உறவினர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.