வவுனியாவில், சுகாதாரத் தொண்டர்கள் இன்று போராட்டத்தில்…(காணொளி)

302 0

வவுனியாவில், சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 15 வருடங்களாக பனியாற்றிவரும் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பனிமனையின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடமையாற்றியவர்களுக்கு நிரந்திர நியமனம் இல்லையா?

யுத்த காலத்தில் எதுவித ஊதியமும் இன்றி கடமையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா?

யுத்த காலங்களில் நலன்புரி நிலையங்களில் கடமையாற்றிய எங்களுக்கு நியமனம் இல்லையா போன்ற பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.