மோதரை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

311 0

2025100846Untitled-1கொழும்பு – மோதரை – ரெட்பானா வத்தை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பலியானவர் 30 வயதானவர் என்றும், அவர் தமது வீட்டில் இருந்த வேளையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2014ஆம் ஆண்டு கிரேன்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அவர், சிறையில் இருந்து ஒரு மாதங்களுக்கு முன்னரே பிணையில் வந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.