பலஸ்தீன சிறைக்கைதிகளுக்கு ஆதரவாக மஹிந்த கையொப்பம்

288 0

பலஸ்­தீன சிறைக்­கை­தி­களின் உண்­ணா­வி­ரத போராட்­டத்­துக்கு ஒரு­மைப்­பாட்டைத் தெரி­விக்கும் வகையில் முன்னாள் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ நேற்று கையெழுத்திட்டார்.

பலஸ்­தீன சிறைக்­கை­தி­களின் உண்­ணா­வி­ரத போராட்­டத்­துக்கு ஒரு­மைப்­பாட்டைத் தெரி­விக்கும் வகையில்
கையொப்பம் பெறும் வேலைத்­திட்­டம் தற்போது பலஸ்­தீன் தூத­ர­கத்தில் இடம்­பெறுகின்றது.

பலஸ்­தீன சிறைக் கைதிகள் தினம் ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­ற நிலையில் அதனை முன்னிட்டு இவ்­வ­ருடம் குறித்த தினத்­தி­லி­ருந்து 1,500 பலஸ்­தீன கைதிகள் சிறை­யி­லுள்ள பலஸ்தீன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மர்வான் பர்­கூதி தலை­மையில் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

இந்தப் போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­விக்கும் வகையில் உல­க­ளா­விய ரீதியில் கையெ­ழுத்து சேக­ரிக்கும் வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இக்கையொப்பம் பெறும் வேலைத்­திட்டம் இன்றும் நாளை 05ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை காலை 10 மணி முதல் நண்­பகல் 12 மணி வரையும், கொழும்பு 07, இலக்கம் 110/10 விஜே­ராம மாவத்­தையில் அமைந்­துள்ள பலஸ்­தீன தூத­ர­கத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

இலங்­கை­யி­லுள்ள பலஸ்­தீன ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்துகொண்டு இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பலஸ்தீன சிறைக் கைதிகளின் போராட்டத்திற்கான ஒருமைப்பாட்டை தெரிவிக்குமாறும் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.