தெரிவு செய்யப்பட்ட 16 வாய்ப்பு

215 0

கல்வியமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அதிபா்கள் 16 பேர் 20 நாட்களுக்கு கல்விக் கருந்தரங்கில் பங்குபற்றுவதற்காக சீனா நாட்டுக்கு செல்லவுள்ளனர்.

இவா்களுக்கான வீசா மற்றும் டிக்கட் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (4) கல்வியமைச்சில் கல்வியமைச்சா் அகில்விராஜ் காரியவாசம் முன்னிலையில் நடைபெற்றது.

இம்மாதம் 7ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை சீனா கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊடாக சீனாவின் பல்வேறு பகுதிகளில் கலந்து கொண்டு பாடசாலைக் கல்வி, நிருவாகம், அபிவிருத்தி பற்றிய அறிவுகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.