கீதா குமாரசிங்கவுக்கு வழங்கிய வரிச்சலுகைகளை மீள அறவிடுமாறு கபே அமைப்பு கோரிக்கை

221 0

கீதா குமாரசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் எனக் கூறி அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதால், அவருக்கு வரிச்சலுகையில் வழங்கப்பட்ட வாகனத்திற்கான வரியை உடனடியாக அறவிடுமாறு கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

திறைசேரியின் செயலாளர் மற்றும் சபாநாயகர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கபே அமைப்பு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு அரசாங்கம் வரிச்சலுகையில் வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரத்தை வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் கிடைக்காமல் போயுள்ளதாகவும் கபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், எப்படியாவது கீதா குமாரசிங்கவிடம் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரியை அறவிட துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கபே அமைப்பு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது