மீன் விற்பனை நிலையங்களில் பரிசோதனை செய்ய கடற்றொழில் அமைச்சர் உத்தரவு

210 0

மீன் விற்பனை நிலையங்களில் உயர் மின்னழுத்தத்துடன் கூடிய மின் விளக்குகள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உயர் மின்னழுத்தத்துடன் கூடிய மின் விளக்குகளால் வௌியாகும் அதிக வெப்பத்தின் காரணமாக மீன்கள் விரைவில் அழுகும் நிலை ஏற்படுகிறது.

எனினும் , மின் விளக்குகளின் பிரகாசம் காரணமாக அழுகிய மீன்களை நுகர்வோரால் இனங்காண முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த நிலை தொடர்பில் அவதானம் செலுத்திய பின்னரே கடற்றொழில் அமைச்சரால் இவ்வாறு விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.