முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மஹிந்தவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் பிரிவிலிருந்து 50 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஓய்வு பெற்ற ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவுக்கு நூறு பேர் கொண்ட இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இராணுவத்தினர் நீக்கப்பட்டு அதற்காக பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில் மீண்டும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு நடவடிக்கையில் மாற்றும் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் 50 பேரை மீண்டும் அழைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது