மகிந்த அணியின் மே தின கூட்டத்திற்கு சென்ற ஒருவர் மாயம்

232 0
காலி முகத்திடலில் இடம்பெற்ற மகிந்த அணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
அவிசாவளை – சீத்தாகமை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதான 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் உறவினர்களால் அவிசாவளை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.