போதை பொருள் வைத்திருந்த நபர் ஒருவர் கைது

232 0

2 லட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான போதை பொருளை கைவசம் வைத்திருந்த நபர் ஒருவர் பொரளை – கிங்சி வீதியில் வைத்து போதை மருந்து தடுப்பு பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்த போதை பொருள் ஒன்றின் விலை 3 ஆயிரத்து 500 ரூபா என போதை மருந்து தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் கிராண்ட்பாஸ் பிரதேசத்தினை சேர்ந்ததுடன், சந்தேகநபர் இன்று மாலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.