ஆறு காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு 10 ஆண்டு கடூழிய சிறை தண்டனை – இளஞ்செழியன் தீர்ப்பு

227 0

யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல் நிலையத்தில் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பில், குற்றம் சுமத்தப்பட்ட ஆறு காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு 10 ஆண்டு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று இந்த தீர்ப்பை அறிவித்தார்.

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி, குற்றச்சாட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய சிறிகந்தராசா சுமணனன் என்பவரை சுன்னாகம் காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்தாக 6 காவல்துறையினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின் இறுதி தொகுப்புரை இன்று பிற்பகல் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.