ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகல் – பிருத்தானியா நிதி வழங்காது

255 0

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பாக கோரப்படும் நிதியினை பிருத்தானியா வழங்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரப்பட்டுள்ள 100 பில்லியன் நிதியினை பிருத்தானியா வழங்கப்போவதில்லை என, இது தொடர்பாக செயல்படும் அமைப்பின் செயலாளர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

சட்டபூர்வமான தொகையை மட்டுமே பிருத்தானியா வழங்கும் என தெரிவித்துள்ள அவர், ஐரோப்பிய ஒன்றியத்தினால் தன்னிச்சையாக கோரப்படும் நிதியினை வழங்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைப்பாளர் கருத்து தெரிவிக்கையில், பிருத்தானியாவின் இந்த மறுப்புக்காக அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நிலுவையில் உள்ள பணம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார்.