வடமாகண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், அபிவிருத்தி செயற்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் கனி விக்னராஜாவிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரியவருகின்றது.