கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவிற்கு வழங்கப்பட்டவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்டபாராளுமன்ற உறுப்பினராக கீதா குமாரசிங்க செயற்பட்டு வந்தார்.
இரட்டை குடியுரிமை பெற்ற கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டதை அடுத்து, பியசேன கமகே குறித்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்