சூரியகொட – லுனுகல பிரதேசித்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
தற்போது சடலம் பதுளை பொது மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், லுனுகல காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.